என் மலர்tooltip icon
    • வீட்டு உபயோக சிலிண்டர்கள் 3 வாரங்களுக்கு இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது.
    • இளையான்குடி, மதுரை, நெல்லை ஆகிய 3 நிலையங்களில் வணிய சிலிண்டர்கள் இருப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

    போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    வணிக பயன்பாடு சிலிண்டர் விநியோகம் பல நகரங்களில் நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    முன்னதாக, வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை கோரிய நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் 3 வாரங்களுக்கு இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது.

    சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல் புதுச்சேரியில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

    இளையான்குடி, மதுரை, நெல்லை ஆகிய 3 நிலையங்களில் வணிய சிலிண்டர்கள் இருப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

    • உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பெட்ரோல், சிலிண்டர் ஆகியவை அனைவருக்கும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய முடியும்.

    போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க நாடு முழுவதும் எஸ்மா சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்டவை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1951-ஐ மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பெட்ரோல், சிலிண்டர் ஆகியவை அனைவருக்கும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய முடியும்.

    உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டதை அடுத்து பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் எஸ்மா சட்டம் அமலானது.

    எஸ்மா சட்டம் அமலானதையடுத்து மாநிலங்களுக்கு இடையிலான எரிபொருள் போக்குவரத்தை மத்திய அரசே நேரடியாக கண்காணிக்கும். மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருட்களின் அதிகபட்ச விலையை அரசே நிர்ணயிக்க எஸ்மா சட்டம் வழிவகுக்கும்.

    எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் பொருட்களை பதுக்கினால் எஸ்மா சட்டத்தின்படி அபராதம், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பதுக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (ESMA) கீழ் அபராதம் விதிக்கப்படுவதோடு கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • இந்த முடிவை தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எடுக்கிறார்கள் என்றால் முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் பொம்மைகள் தானா?
    • ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படும் போது அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் தவிர பிற பணிகளுக்கு இனி நிரந்தர அடிப்படையில் எவரையும் நியமிக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி உண்மையானதாக இருந்தால் சமூகநீதிக்கும், கண்ணியமான மனிதவாழ்க்கைக்கும் எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற மக்கள் நலவாழ்வுத் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு செலவுகளைக் குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்புனர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் இனி நிரந்தரமாக நியமிக்கப்படக் கூடாது என்றும், ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அரசுத்துறைகளில் டி பிரிவு பணிகளில் மட்டும் ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சி பிரிவு பணியிடங்களுக்கும் இந்த முறையை நீட்டிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எம்.எப் பரூக்கி, சி.சந்திரமவுலி, தேவ.ஜோதி ஜெகராஜன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்தக் குழுவை 18.10.2022-ஆம் நாளிட்ட 115 எண் கொண்ட அரசாணை மூலம் தமிழக அரசு அமைத்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அக்குழுவின் ஆய்வு வரம்புகள் மறு ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது.

    ஆனால், அவ்வாறு செய்யப்படாததால், பரூக்கி தலைமையிலான குழு பணியை தொடங்காத நிலையில், எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதையும் கடந்து இது போன்ற கொள்கை முடிவுகள் அமைச்சரவையில் தான் எடுக்கப்பட வேண்டும். மாறாக, இந்த முடிவை தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எடுக்கிறார்கள் என்றால் முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் பொம்மைகள் தானா?

    சுகாதாரத்துறையில் ஏற்கனவே மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களையும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பணி நிலைப்பு செய்யும் நடைமுறை உள்ளது. இந்த நடைமுறையே மாற்றப்பட வேண்டும்; அனைத்துப் பணியாளர்களும் நேரடியாக நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும்.

    ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படும் போது அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது. இது சமூகநீதியை படுகொலை செய்யும் செயலாகும். இது தான் திமுக அரசு சமூகநீதியை காக்கும் லட்சணமா? இதைத் தான் திமுக விரும்புகிறதா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும், மக்கள் நலவாழ்வுத்துறை உள்பட அனைத்துத் துறைகளில் ஒப்பந்த முறை நியமனங்கள் ரத்து செய்யப்படும்; நிரந்தர அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் நியமிக்கப்படுவார் என்றும் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    பல்வேறு முதல் முறை அம்சங்களுடன் வருகிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனது இந்திய சந்தையில் தனது அதிகம் பிரபலமான செடான்- வெர்னா மாடலை அப்டேட் செய்ததது. வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2026 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.

    புதிய 2026 வெர்னா மாடல் ரூ. 10.98 லட்சம் எனும் துவக்க விலையில் விற்பனைக்கு வருகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்டீரியர் மற்றும் வெளிப்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய ஃபேஸ்லிஃப்ட் கார்- இந்த பிரிவில் பல்வேறு முதல் முறை அம்சங்களுடன் வருகிறது.

    மேம்பட்ட வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல்- HX2, HX4, HX6, HX8 மற்றும் HX19 என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார்-1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் மேனுவல், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் புதிய வெர்னா மாடல்- கிளாஸி புளூ மற்றும் கிரே மேட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    வெளிப்புறத்தில் இந்த கார் பிளாக் க்ரோம் ரேடியேட்டர் கிரில், டூயல் எல்.இ.டி. ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ரீ-டிசைன் செய்யப்பட்ட பம்ப்பர்கள், 16-இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. உள்புறத்தில் இந்த கார் அதிக மாற்றங்களுடன் வருகிறது. அதன்படி மேம்பட்ட ஹூண்டாய் லோகோ கொண்ட முற்றிலும் புதிய ஸ்டீரியங் வீல், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் எட்டு வழிகளில் பவர் அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் சீட், ஓட்டுநர் அருகில் உள்ள இருக்கைகளை நான்கு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரின் ஓட்டுநர் இருக்கைக்கு வெல்கம் அம்சத்துடன் மெமரி ஃபங்ஷன், முன்பக்கம் ஓட்டுநர் தவிர்த்த இரண்டாவது இருக்கைக்கு எலெக்ட்ரிக் வாக்-இன் டிவைஸ், ரியர் வின்டோ சன்ஷேடு, டேஷ்கேம், ஏழு ஏர்பேக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை சரவுண்ட்-வியூ கேமரா, லெவல் 2 ADAS சூட், முன்பக்க வென்டிலேட்டெட் இருக்கைகள, 8-ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    • நேற்றிரவு நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு, வணிக சிலிண்டர்களின் விவரங்கள் கேட்கப்பட்டது.
    • வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி தொடங்கிய இந்த போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தங்களது நாடு மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக இந்த போர் நீடித்து வருகிறது.

    இந்த போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நேற்றிரவு அவசர ஆலோசனை நடைபெற்றது.

    தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினர்.

    நேற்றிரவு நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு, வணிக சிலிண்டர்களின் விவரங்கள் கேட்கப்பட்டது.

    ஆலோசனையின்போது கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு விபரங்களை இன்று பிற்பகலுக்குள் தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை கோரிய நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் 3 வாரங்களுக்கு இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது.

    சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
    • உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசாக கிடைத்தது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.

    மேலும் தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் புரிந்தது. அதோடு போட்டியை நடத்திய நாடுகளில் முதல் தடவையாக கோப்பையை வென்ற நாடு எனவும் இந்தியா சாதித்தது. உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசாக கிடைத்தது.

    இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. 

    • பிரீமியம் S1 ஜென் 3 சீரிசில் 5.2kWh மற்றும் 4kWh பேட்டரி ஆப்ஷன்கள் கொண்ட S1 Pro+ மற்றும் 4kWh மற்றும் 3kWh வகைகளுடன் S1 Pro ஆகியவை அடங்கும்.
    • இந்த மாடல்களின் விலை ரூ.77,999-இல் தொடங்கி ரூ.1.14 லட்சம் வரை இருக்கும்.

    டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றதை கொண்டாடும் வகையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 'சாம்பியன் மஹோத்சவ்' என்ற கால வரையறுக்கப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நிறுவனம் அதன் மின்சார இருசக்கர வாகனங்கள் அனைத்திற்கும் மூன்று நாட்களுக்கு ரூ.10,000 மதிப்புள்ள சலுகைகளை வழங்குகிறது.

    இந்த சலுகை, அனைத்து ஓலா ஸ்கூட்டர்களுக்கும், ரோட்ஸ்டர் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கும் பொருந்தும். இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க பட்டத்தை வென்ற பிறகு கொண்டாட்டங்களை நீட்டிக்கவும், அந்நிறுவன வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் மூலம் அதிகமான வாடிக்கையாளர்களை கவரவும் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தற்போதைய வரிசையில் ஜென் 3 S1 ஸ்கூட்டர் வரிசை மற்றும் ரோட்ஸ்டர் X மோட்டார்சைக்கிள் சீரிஸ் ஆகியவை அடங்கும். பிரீமியம் S1 ஜென் 3 சீரிசில் 5.2kWh மற்றும் 4kWh பேட்டரி ஆப்ஷன்கள் கொண்ட S1 Pro+ மற்றும் 4kWh மற்றும் 3kWh வகைகளுடன் S1 Pro ஆகியவை அடங்கும்.

    நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை மாடல்களில் 4kWh பேட்டரியுடன் கூடிய S1 X+ மற்றும் 2kWh, 3kWh மற்றும் 4kWh பேட்டரி பேக்குகளுடன் கிடைக்கும் S1 X ஆகியவை அடங்கும். இந்த மாடல்களின் விலை ரூ.77,999-இல் தொடங்கி ரூ.1.14 லட்சம் வரை இருக்கும்.

    ஓலா சாம்பியன் மஹோத்சவ் பிரச்சாரம் இந்தியா முழுவதும் மூன்று நாட்கள் நடைபெறும், இந்த காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் எந்த ஓலா எலெக்ட்ரிக் வாகனத்திற்கும் ரூ.10,000 சலுகையை பெறலாம்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
    • தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் கைதான கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரின் மகன் ஆகாஷ் டெலிசன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக அவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலத்தில் இருந்து விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி திடீ ரென ஆகாஷ் டெலிசன் இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகாஷ் டெலிசன் சாவில் போலீசார் மீது சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையில் ஆகாஷ் டெலிசன் சாவுக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண நிதி, அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி மானாமதுரை பஸ் நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அமைச்சர் பெரியகருப்பன், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் கைவிடப்படவில்லை. 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் நேற்று விசாரணை கைதி ஆகாஷ் டெலிசன் இறப்பு வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. வெங்கட் ராமன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைதி சாவு குறித்து வழக்குப்பதிவு செய்திருந்த மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசாரிடம் இருந்து வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கினர்.

    மேலும் ஐகோர்ட்டில் விசாரணை கைதி இறப்பு குறித்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு நேற்று விசாரித்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு, அரசு ஆஸ்பத்திரி டீன் ஆகியோர் முன்னிலையில் ஆகாஷ் டெலிசன் உடலை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதை தடுக்க மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு மனுதாரர் அறிவுறுத்துமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.

    இருப்பினும் மானா மதுரையில் 2-வது நாளான நேற்றும் சாலையில் பந்தல் அமைத்து போராட்டம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். 3-வது நாளான இன்று காலையும் சாலைமறியல் தொடருகிறது. அவர்களிடம் போலீசார் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் மானாமதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மதுரை, ராமேசுவரத்தில் இருந்து வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    • தவறு செய்பவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்.
    • இப்படி ஒரு டுவிட் வரும் என்று தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன்.

    நடிகர் பார்த்திபன் சில தினங்களுக்கு முன்பு திரிஷா குறித்து கூறிய கருத்துக்கள் சர்ச்சையானதால் திரிஷா அவருக்கு கண்டனம் தெரிவித்தார். தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு பார்த்திபன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று பார்த்திபன் வெளியிட்டு உள்ள வீடியோவில் கூறியதாவது:-

    திரிஷாவை நான் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். இந்த நேரத்தில் ஒரு திரைப்பட நட்சத்திரம் என்பதை மீறி வந்திருக்கிற திரிஷாவுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    என்னதான் நாம் ஷார்ப்பா... புத்தி கூர்மையாக பேசினால் கூட மைக்கில் பேசி விட்டதால் புத்திசாலிதனம் ஆகி விடாது என்ற பழி நம் மீது இருக்கிறது. அதனால் நான்கூட முட்டாள் தனமா பேசினால் கூட புத்திசாலிதனமா டிரான்ஸ்லேட் பன்னிக்கொடுக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு. ஓகே.

    ஹாய் பிரெண்ட்ஸ் நல்லா இருக்கிங்களா? தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்பவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்.

    அதே மாதிரிதான் நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்பது ஒரு விதம். மன்னிப்பு கேட்கிறேன் என்பது இன்னொரு விஷயம். ஒரு நிகழ்ச்சியை தவறு நடந்து விட்டதாக உணர்கிறேன். உண்மையில் அது தவறிதான் நடந்தது.

    நான் மேடையில் விஜய், அஜித்தை பற்றி பேசும்போது வேறு ஒரு புகைப்படம் வந்தது. அதை பார்த்ததும் உண்மையில் நான் திகைத்து போய் விட்டேன். ஆனால் வேண்டுமென்றே அந்த போட்டோவை நான் போட சொல்லி பேச ஆசைப்பட்டேன் என்று சொல்வது 100 சதவீதம் பொய்.

    ஏனெனில் மகளிர் தினம் அன்று. நான் யாரை பற்றி பேசுவேன் என்றால் அன்னை தெரசா, வேலு நாச்சியாரை பற்றி பேச ஆசைப்படுறேன். அதை விடுத்து நான் இப்படி பேச ஆசைப்பட்டேன் என்று சொல்வது சரியில்லை.

    இந்த விவகாரம் குறித்து நான் மன்னிப்பு கேட்ட பிறகு திரிஷா ஒரு டுவிட் போடுகிறார். அதில் நானே விரும்பி அந்த போட்டோவை போட சொன்னதாக குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு டுவிட் வரும் என்று தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன்.

    அது ஒரு மூன்றாவது மனுஷியின் ஒரு மூன்றாம் தரமான டுவிட். சமீப காலமாக அவர் குறித்து வந்த கொச்சையான கருத்துக்கள் பொதுவெளியில் இருக்கிறது. அவை அனைத்துக்கும் அவர் பதில் சொல்லியிருந்தார் என்றால் நான் இதை வரவேற்று இருப்பேன்.

    ஆனால் அது எதற்குமே பதில் சொல்லாமல் எனக்கு மட்டுமே கண்டனம் தெரிவித்த காரணத்தால் நான் வருத்தம் தெரிவித்ததே தவறு என நிறைய பேர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். வி ஸ்டாண்ட் வித் பார்த்திபன் என்று நிறைய பேர் குரூப் ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த நண்பர்களுக்கு நன்றி"

    இவ்வாறு பார்த்திபன் வீடியோவில் கூறியுள்ளார்.



    • ரஷியாவிடமிருந்து கொள்முதலைக் குறைத்துள்ள இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் பக்கம் திரும்பி உள்ளது.
    • பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதிக்கு சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது.

    ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, இந்தியா உலகின் 2-வது பெரிய ஆயுத இறக்குமதி நாடாக உள்ளது. இந்த பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி, ஆயுத இறக்குமதியில் உக்ரைன், இந்தியா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.

    உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 8.2 சதவீதம். இருப்பினும், 2015-20 உடன் ஒப்பிடும்போது, 2021-25-ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து ஆயுத கொள்முதல் 4 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 40 சதவீதம். முந்தைய காலகட்டத்தில் இது 51 சதவீதமாக இருந்தது. 2011-15 காலகட்டத்தில் இது 70 சதவீதமாக இருந்தது. ரஷியாவிடமிருந்து கொள்முதலைக் குறைத்துள்ள இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் பக்கம் திரும்பி உள்ளது.

    மறுபுறம், பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதிக்கு சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது. 2021-25-ம் ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதியில் சீனாவின் பங்கு 80 சதவீதமாக இருந்தது. 2016-20 உடன் ஒப்பிடும்போது, 2021-25-ம் ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 66 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா (35 சதவீதம்), ரஷியா (17 சதவீதம்) மற்றும் சீனா (14 சதவீதம்) உலகிற்கு ஆயுத சப்ளையர்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன.

    ×